எக்மோர் ரயில் நிலையத்தில் கழிவறை தண்ணீரை பாலில் கலந்த டீக்கடைக்காரர்..! என்ன நடந்தது..?
Train toilet water mixed in milk
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில், ரயில்களின் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரைலானது. இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி அஸ்லம் பாஷா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
எக்மோர் ரயில்நிலையத்தில் இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அந்த பதிவில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ குறித்து விளக்கம் தெரிவித்துள்ளனனர் எக்மோர் ரயில் நிலைய அதிகாரிகள்.
வீடியோ வெளியானதும் குறிப்பிட்ட கடை தற்காலிகமாக மூடப்பட்டுவித்ததாகவும், மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் கடைக்காரர் தண்ணீரை பாலில் ஊற்றவில்லை, பாய்லரில் தான் ஊற்றியதாகவும், பாலில் அந்த தண்ணீர் கலக்க வாய்ப்பு இல்லை எனவும் பதில் அளித்துள்ளார்.