×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களே உஷார்! ரயில் டிக்கெட் முன்பதிவை மிஸ் பண்ணிடாதீங்க!

train ticket for pongal festival

Advertisement


தீபாவளி, பொங்கல் என விசேஷ நாட்களில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் சொந்த ஊர் செல்ல மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயிலில் முன்பதிவு செய்வது வழக்கம். பொதுவாக விழா காலங்கள் என்றாலே ரயில்நிலையம், பேரூந்துநிலையம் திருவிழா போல காட்சியளிக்கும்.

தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் தனியார் பேருந்துகளின் கட்டணம் விமான கட்டணம் அளவிற்கு உயர்ந்து மக்கள் சிலர் சொந்த ஊருக்கே செல்லாத நிலை ஏற்படும். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை தொடங்குகிறது.

நாளை காலை சரியாக 8 மணி முதல், ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. அதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ஆம் தேதியும் தொடங்குகிறது.

ஜனவரி 13ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 16-ஆம் தேதியும், ஜனவரி 15-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 17-ஆம் தேதியும், ஜனவரி 16-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். 

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்ப முடிவு செய்தவர்கள் ஜனவரி 19ஆம் தேதிக்கு செப்டம்பர் 21 ஆம் தேதியும் ஜனவரி 20ஆம் தேதிக்கு செப்டம்பர் 22ஆம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Train ticket #pongal 2020
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story