×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்.. இளைஞர் பலி..!

செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்.. இளைஞர் பலி..!

Advertisement

தேனி மாவட்டம் சின்னமனூரில் வசித்து வருபவர் காளீஸ்வரி. இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் ஆட்டோ ஸ்பேர்ஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் தேனி வீரப்ப அய்யனார் மலை கோயிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது கோவில் அருகே உள்ள வழுக்கு பாறைக்கு நண்பர்களுடன் சென்ற சதீஷ்குமார் செல்பி எடுக்க முயற்சி செய்து தவறி கீழே விழுந்து பாறை இடிக்கில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சதீஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Selfie Craze #young man died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story