×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீளா துயரம்.. மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்.!

மீளா துயரம்.. மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் பால்பாண்டி - ஜெயலட்சுமி தம்பதியினர். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மனைவி ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டு இறந்து போன துக்கம் தாங்காமல் மனவேதனையில் பால்பாண்டி இருந்துள்ளார்.

இந்த சூழலில் பால்பாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wife died #Husband sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story