×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எச்சில் துப்பியதாக போக்குவரத்து ஊழியர் மீது தாக்குதல்... காவலரின் செயலால் கோபமடைந்த பொதுமக்கள்.!

எச்சில் துப்பியதாக போக்குவரத்து ஊழியர் மீது தாக்குதல்... காவலரின் செயலால் கோபமடைந்த பொதுமக்கள்.!

Advertisement

தன்னை பார்த்து எச்சில் துப்பியதாக போக்குவரத்து ஊழியரை, காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து ஊழியரான பாலச்சந்திரன் பணி செய்து வந்துள்ளார். அப்போது வெயில் காரணமாக அருகில் உள்ள கடையில் லெமன் சோடா வாங்கி குடித்துள்ளார்.

இந்த நிலையில், அவ்வழியாக சென்ற காவலர் ஜான் லூயிஸ் தன்னை பார்த்து எச்சில் துப்பி, போக்குவரத்து ஊழியர் ஏளனம் செய்வதாக கூறி பாலச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் வலி தாங்க முடியாமல் பலத்த காயமடைந்த பாலச்சந்திரன், 'தான் ஒரு இதய நோயாளி, என்னை விட்டுவிடுங்கள்' என கதறியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாலச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், காவலர் ஜான் லூயிஸை முற்றுகையிட்டனர்.

பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காவலர் ஜான் லூயிஸை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Saithapettai #police #traffic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story