×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வலுவிழந்த அசானி புயல்... அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வலுவிழந்த அசானி புயல்... அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Advertisement

வங்கக் கடலில் உருவான 'அசானி' புயல், ஆந்திர மாநிலத்தில், மசூலிப்பட்டினத்துக்கும், நரசப்பூருக்கும் இடையே கரையை கடந்தது. தற்போது தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட அதனை சுற்றி உள்ள 18 மாவட்டங்களுக்கு இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை  உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #rain #18 districts
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story