×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவியிடம்.... பாதிரியார் செய்த காமலீலைகள்...கைது செய்த போலீசார்..!!

பள்ளி மாணவியிடம்.... பாதிரியார் செய்த காமலீலைகள்...கைது செய்த போலீசார்..!!

Advertisement

விடுதி காப்பாளரான பாதிரியார் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த கோணம்பட்டியில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாதிரியார் ஆண்ட்ரூஸ்(46) என்பவர் இந்த காப்பகத்தின் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். 

இந்நிலையில், மாணவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு  தேர்வு விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். விடுமுறைக்கு சென்ற பொங்கலூரை சேர்ந்த 14 வயதான மாணவி தன்னுடைய பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தனக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், இது தொடர்பாக வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதை கேட்டுஅதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாதிரியார் ஆண்ட்ரூஸை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #school girl #Pastor #Sexual Harassment #Arrested Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story