1089 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
1089 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. தமிழக அரசு தூறைகளில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள், குரூப் 1, குரூப் 2 , 2A, குரூப் 4 போன்ற பல தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன.
தற்போது நில அளவையர், வரைவாளர், உதவி அளவையர் மற்றும் உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் : நில அளவையர், வரைவாளர், உதவி அளவையர் மற்றும் உதவி வரைவாளர்.
மொத்த காலியிடங்கள்: 1089
நில அளவையர் : 794 +4
வரைவாளர் : 236
உதவி அளவையர் / உதவி வரைவாளர் : 55
சம்பளம் - மாதம் : ரூ.19500-71900/
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் : 29.07.2022
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.08.2022
தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2022
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு ( Online Exam)
கல்வித் தகுதி: சிவில் எஞ்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் (Diploma in Civil Engineering) முடித்தவர்கள் (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிl துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362