BREAKING : சற்று முன்... முழு பயிர்க்கடன் தள்ளுபடி...! விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!!
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின், முழு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அரசு தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும், மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தமிழக விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு விரைவில் அறிவிப்பு?
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன், விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான முழு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறினார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடுவார் என்று அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING: பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன தகவல்.!!!
மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கோரிக்கை
மேலும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதுகாக்க முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
தகவலின்படி, மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடையில் கொண்டு வருவது அவசியம் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் தமிழகத்தின் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: BREAKING: பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன தகவல்.!!!