ஊரடங்கு மேலும் நீட்டிப்பா..! மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
Tn cm to be discussed with collectors on 29th

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் வீரியத்தை கட்டுப்படுத்த ஆராய்சியாளர்களால் அறிவுறுத்தப்பட்ட ஒரே வழிமுறை சமூக இடைவெளி. இதனை கடைப்பிடிக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கினை அமல்படுத்தியது.
இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் சில தளர்வுகளுடன் ஊரடங்கினை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஜூலை மாதத்திற்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.