விடுதியில் தங்கி பயின்று வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்.. பெற்றோர்கள் கண்ணீர் குமுறல்.!
விடுதியில் தங்கி பயின்று வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்.. பெற்றோர்கள் கண்ணீர் குமுறல்.!
சென்னையை அடுத்துள்ள கோவளம் பகுதியில் செயல்பட்டு வரும் உண்டு-உறைவிட பள்ளியில், திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த மாணவி தங்கி பயின்று வருகிறார். இவர் தனது 6 ஆம் வகுப்பில் இருந்து விடுதியிலேயே தங்கி பயில்கிறார்.
இப்போது 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெற்றோருக்கு தொடர்பு கொண்டு, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
பெற்றோர்கள் இருவரும் கோவளம் விடுதிக்கு சென்ற நிலையில், திருவண்ணாமலையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மகளை அழைத்து என்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது.
இதனால் பதறிப்போன பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் யார்? என்ற விசாரணை நடக்கிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362