×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமி பலாத்காரம்.. கிறிஸ்துவ மதபோதகர் திருப்பூரில் கைது.!

சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமி பலாத்காரம்.. கிறிஸ்துவ மதபோதகர் திருப்பூரில் கைது.!

Advertisement

16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 31). இவர் மதபோதகராக இருந்து வருகிறார். மேலும், சிறிய அளவிலான சர்ச் ஒன்றையும் வைத்து நடத்தி வந்துள்ளார். 

இந்த சர்ச்சுக்கு 16 வயது சிறுமி பிரார்த்தனை செய்ய வந்து சென்ற நிலையில், சாமுவேல் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து, கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் பேரில் சாமுவேல் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது நடவடிக்கை எடுக்க செல்கையில் சாமுவேலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கைது நடவடிக்கை தாமதம் ஆனது. 

இந்நிலையில், சாமுவேலின் உடல்நலம் தேறிய நிலையில், அவரை நேற்று கைது செய்த காவல் துறையினர் நீதிபதிகள் முன் சமர்ப்பித்து உடுமலை கிளை சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruppur #Veerapandi #Church Pastor #arrest #sexual abuse #Minor Girl #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story