×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் இரயில் அருகே செல்பி எடுக்க முயற்சி; 2 இளைஞர்கள் இரயில் மோதி பரிதாப மரணம்.. திருப்பூரில் சோகம்.!

ஓடும் இரயில் அருகே செல்பி எடுக்க முயற்சி; 2 இளைஞர்கள் இரயில் மோதி பரிதாப மரணம்.. திருப்பூரில் சோகம்.!

Advertisement

இரயில் பயணிக்கும் போது நெருக்கமாக நின்று செல்பி எடுத்த இளைஞர்கள் வீட்டில் புகைப்படமாக தொங்கவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஆணைப்பாளையம் பகுதியில் இரயில்வே தண்டவாளம் இருக்கிறது. அப்பகுதியில் விஜய் மற்றும் பாண்டியன் என்ற இரண்டு இளைஞர்கள், இரயில் பயணம் செய்யும்போது செல்பி எடுக்க முயற்சித்து இருக்கின்றனர். 

இந்நிலையில், தண்டவாளத்திற்கு அருகே நின்றவாறு செல்பி எடுத்த இளைஞர்கள், அவ்வழித்தடத்தில் சென்ற அதிவிரைவு இரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இரயில்வே காவல் துறையினர், இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரயில் தண்டவாளத்தில் அஜாக்கிரதையாக இருந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Selfie dead #Latest news #திருப்பூர் #Thirupur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story