×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலனை போக்ஸோவில் இருந்து காப்பாற்ற பச்சிளம் பிஞ்சு கொலை... 22 வயதில் நிர்மூலமான வாழ்க்கை..! அதிர்ச்சி பின்னணி..!!

கள்ளக்காதலனை போக்ஸோவில் இருந்து காப்பாற்ற பச்சிளம் பிஞ்சு கொலை... 22 வயதில் நிர்மூலமான வாழ்க்கை..! அதிர்ச்சி பின்னணி..!!

Advertisement

 

முன்னாள் காதலனின் மீதான போக்ஸோ வழக்கை திரும்ப பெற முயற்சித்து, இருவருக்கும் பிறந்த குழந்தையை அவர்களே கொலை செய்த பரிதாபம் அதிரவைத்துள்ளது. காதலன் போக்ஸோவில் கைதாக, மற்றொரு திருமணம் முடித்த பெண்மணி இரண்டாவது குழந்தை பிறந்தும் காதலை மறக்க இயலாததால் நடந்த சோகம் அதிரவைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், குண்டடத்தை முண்டுவேலம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மோகன் ராஜ் (வயது 22). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இதே கிராமத்தை சேர்ந்த பெண்மணி அனிதா (வயது 20). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மலர்ந்தது. 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே காதல் வயப்பட்டு தனிமையில் சந்திக்கும் வழக்கத்தை காதல் ஜோடி கொண்டுள்ளது. ஒரு சமயத்தில், அனிதாவுக்கு 17 வயது இருக்கும்போது இருவரும் தனிமையில் சந்தித்ததின் விளைவாக அனிதா கர்ப்பமாகினார். அவருக்கு 17 வயது நடந்து வந்த காரணத்தால் மோகன்ராஜ் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். 

அனிதா தனது சிறுவயதிலேயே குழந்தையை பிரசவிக்க, தினேஷ் என்ற பெயர் வைத்து வளர்த்தும் வந்துள்ளார். இவர் அவ்வப்போது கைக்குழந்தையோடு உடுமலை பகுதிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அனிதாவுக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்படவே, அவர் தனது வாழ்க்கையில் நடந்ததை மறைத்து திருமணம் செய்து இருக்கிறார். 

அதனைத்தொடர்ந்து, குழந்தையுடன் அனிதா கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அனிதா 2ம் முறையாக கர்ப்பமாகியுள்ளார். பிரசவத்திற்கு அவர் வீட்டிற்கு வந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பிரசவத்திற்கு வந்தவர் உடுமலைக்கு செல்லாமல் தனது கிராமத்திலேயே குழந்தைகளோடு இருந்துள்ளார். 

சிறையில் இருந்த முன்னாள் காதலன் மோகன்ராஜ் வெளியே வந்ததும் அனிதா காதல் தொடர்பை புதுப்பித்து இருக்கிறார். இதற்கிடையில், கடந்த 19ம் தேதி குழந்தை தினேஷ் நீரில் மூழ்கி பிணமாக மிதந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரித்தபோது, குழந்தை அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். 

ஆனால், குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த ஒருவர், அனிதா - அவரது கள்ளக்காதலன் மோகன்ராஜ் தொடர்பான தகவலை காவல் துறையினரிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். இதனையடுத்து, காவல் துறையினர் அனிதா - மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பகீர் உண்மை அம்பலமானது. 

மோகன் ராஜ் சிறைக்கு சென்ற சமயத்தில் வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து குழந்தை பிறந்தாலும், பழைய காதலை மறக்க முடியாத அனிதா முன்னாள் காதலனை காப்பாற்ற நினைத்துள்ளார். அதற்காக தங்களுக்கு பிறந்த குழந்தை தினேஷை கொலை செய்யவும் துணிந்துள்ளார். 

ஏனெனில் மோகஜ் ராஜின் மீது போக்ஸோ வழக்கு இருப்பதால், அதனை முடித்துவைக்க இருவரும் சேர்ந்து குழந்தையை கொன்றுள்ளது அம்பலமானது. குழந்தையை கொலை செய்துவிட்டு கள்ளகாதலனோடு நாடகமாடிய அனிதா என இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruppur #tamilnadu #Affair #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story