×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளகாதலால் வாலிபர் கொலை?.. வாயில் நுரைதள்ளி இளைஞர் மரணம்.. பெற்றோர்கள் குமுறல்.!

கள்ளகாதலால் வாலிபர் கொலை?.. வாயில் நுரைதள்ளி இளைஞர் மரணம்.. பெற்றோர்கள் குமுறல்.!

Advertisement

மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் ரகுபதியூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரகுபதியூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவரின் மனைவி விசித்ரா. இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். விசித்ராவுக்கும் - அவரின் அத்தை மகன் சீனிவாசனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 4 ஆம் தேதி நவீன் குமார் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயக்கத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர் நவீன் குமாரை மீது மருத்துவமனையில் அனுமதிக்கவே, நவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நவீனின் தந்தை முருகன் மகனின் செல்போனை ஆய்வு செய்த போது, விசித்ராவுடன் நவீன் குமார் நீண்ட நேரம் செல்போனில் பேசியது அம்பலமானது. இதனால் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வசியரினை மேற்கொள்ள தொடங்கவே, நல்லடக்கம் செய்யப்பட்ட முருகனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tirupattur #death #Mystery #police #Murder #Affair #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story