×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னை யாரோ கற்பழிச்சுடாங்க... அரசுவேலை வாங்கி தருவதாக சொல்லி செய்த அட்டூழியம்! அதுவும் யாரு தெரியுமா? விசாரணையில் விதவை பெண் சொன்ன பகீர் வாக்குமூலம்..!!!

திருப்பத்தூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி விதவை மருமகளை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு. கர்ப்பமான விவகாரத்தில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், 26 வயதான விதவை பெண்ணை அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டில் 66 வயது மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். கர்ப்பமான பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனந்தராஜ் என்பவரின் மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதன்பின் அவரது 26 வயது மனைவி, தனது மூன்று குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி

தகவலின்படி, மருமகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தொடர்ந்து உறுதியளித்து வந்த ஆனந்தராஜ், அந்த நம்பிக்கையை பயன்படுத்தி அவருடன் நெருக்கமாக பழகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலப்போக்கில் அந்தப் பெண் கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முயல் பிடித்து தருகிறேன் என்னுடன் வா.... 9 வயது சிறுமியை தனியாக காட்டுக்குள் அழைத்து சென்று கொடூரன் செய்த வேலை... வேலூரில் நடந்த பகீர் சம்பவம்!!!

இதனால் விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், நடந்ததை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்த தகவல்

நாளடைவில் பெண்ணின் கர்ப்பம் குறித்து அக்கம் பக்கத்தினரிடையே பேச்சு எழுந்துள்ளது. இதையடுத்து பதற்றமடைந்த அந்தப் பெண், தன்னை யாரோ பலாத்காரம் செய்ததாக கூறியதாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர், அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர்.

விசாரணையில் வெளிவந்த உண்மை

புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் முரண்பட்ட தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில், தனது கர்ப்பத்திற்குக் காரணம் மாமனார் ஆனந்தராஜ்தான் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக முயன்ற ஆனந்தராஜை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதையும் படிங்க: திட்டம்போட்டு பெண்ணின் கணவனை மது வாங்க அனுப்பிய நபர்! மிரட்டலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...பயத்தில் திக்குமுக்காடிய பெண்! 5 மாதங்களுக்குப் பிறகு வெளியான பகீர் உண்மை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருப்பத்தூர் #Father in Law Arrest #மகளிர் காவல் நிலையம் #Crime news #Udayamuthur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story