×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான 3 மாதத்தில் 19 வயது இளம்பெண் கடிதம் எழுதிவைத்து தற்கொலை; கண்ணீரில் கணவர்.!

திருமணமான 3 மாதத்தில் 19 வயது இளம்பெண் கடிதம் எழுதிவைத்து தற்கொலை; கண்ணீரில் கணவர்.!

Advertisement

 

திருநெல்வேலி நகரம் வையாபுரி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார். இவரின் மனைவி அமுதா (வயது 19). தம்பதிகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 

நெல்லை நகரில் இருக்கும் தனியார் கடையில் சரவணகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அமுதாவிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சரவணகுமார் சென்றுள்ளார். 

இதில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் அமுதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு அமுதா எழுதிய கடிதத்தில், "தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை" என்றும் குறிப்பிட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து 3 மாதமே ஆவதால், வட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tirunelveli #Women #suicide #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story