×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடச்சீ கருமம்.. லாயர் செய்ற வேலையா இது?.. பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பகீர் காரியம்.!

அடச்சீ கருமம்.. லாயர் செய்ற வேலையா இது?.. பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பகீர் காரியம்.!

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி, வடக்கு தெருவை சார்ந்த வழக்கறிஞர் செல்வகுமார். இவர் பணகுடியை சார்ந்த பெண்ணை தவறான எண்ணத்துடன் கிண்டலடித்து வந்துள்ளார். 

மேலும், கடந்த 09 ஆம் மாதம் 20 ஆம் தேதி பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பெண் கூச்சலிட்டு ஆட்கள் கூடியதால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இதன்பின்னர், பெண்ணின் அலைபேசி எண்ணை பெற்று, அவருக்கு வாட்சப் மூலமாக ஆபாச படங்களை அனுப்பி ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். 

இதுகுறித்து பெண்மணி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் மனு அளிக்கவே, அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில், வழக்கறிஞர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tirunelveli #Panakudi #tamilnadu #sexual torture
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story