×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோல்நோய் பாதிப்பால் அச்சம்.. இளைஞர் இரயில் முன்பாய்ந்து தற்கொலை..!

தோல்நோய் பாதிப்பால் அச்சம்.. இளைஞர் இரயில் முன்பாய்ந்து தற்கொலை..!

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி, இரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தென்காசி இரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், வாலிபர் கல்லிடைக்குறிச்சி கிராமத்தை அடுத்துள்ள தெற்கு அத்தியடி பகுதியை சார்ந்த சிதம்பர சுப்பிரமணியன் எனப்வரின் மகன் மாரியப்பன் (வயது 24) என்பது தெரியவந்தது.

இவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முந்தினம் ஊருக்கு வந்தவர் தோல் நோய் குறித்த கவலையில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் அவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tirunelveli #Kallidaikurichi #tamilnadu #Tenkasi #police #death
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story