×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலன் வாட்ஸ்அப்பில் 100 வீடியோக்கள்..! பதறிப்போன கணவன்.! துளசி விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி பகுதியை சேர்ந்தவர் வடிவழகன். கூலித் தொழிலாளி

Advertisement

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி பகுதியை சேர்ந்தவர் வடிவழகன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி துளசி. இவர்களுக்கு 4 வயதில் கோகுல் என்ற மகனும், 2 வயதில் பிரதீப் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ககணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு துளசியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பியுள்ளார் வடிவழகன்.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு துளசியின் செல்போனில் இருந்த வீடியோக்களை வடிவழகன் பார்த்துள்ளார். அதில் கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிரதீப்பை துளசி கடுமையாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. அதில் குழந்தையின் வாயில் கடுமையாக குத்தியதில் இரத்தம் சொட்டியுள்ளது. இதனை கண்டு துடிதுடித்துப் போன தந்தை வடிவழகன் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், துளசி  மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

போலீசார் ஆரம்பத்தில் நடத்திய விசாரணையில், அவர் தனது கணவர் மீது இருந்த வெறுப்பினால் குழந்தையை தாக்கியதாகக் கூறியுள்ளார். பின்னர் தீவிர விசாரணையில், மற்றொரு வாலிபருடன் கொண்ட தகாத உறவின் காரணமாகவே அவருக்கும் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது எனவும், அந்தக் கோபத்தில் குழந்தையை தாக்கி அந்த வீடியோவை அந்த ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்  என்பதும் தெரியவந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் ராங் கால் மூலமாக துளசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல் போனிலேயே காதலை வளர்த்துள்ளனர். அப்போது, முதல் குழந்தை துளசியை  போல் அழகாக இருப்பதாகவும், 2ஆவது குழந்தை பிரதீப் தந்தை முகஜாடையில்  இருப்பதாகவும் கூறி, அவனை தனக்கு பிடிக்கவில்லை என்று  துளசியிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

இதனால் மணிகண்டனை சந்தோசப்படுத்துவதற்க்காக  2வது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோவை எடுத்து, வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.  மேலும், கணவனை பிரிந்து செல்ல முடிவு செய்துதான் குழந்தையை அடித்து கொடுமை  செய்து, குடும்பத்திலும் தகராறு செய்துள்ளார் என்றும்  கூறப்படுகிறது. மணிகண்டனிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் குழந்தையை தாக்கும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், குழந்தையை தாக்கிய துளசியும் ஆசை வார்த்தையை கூறி தூண்டி அதற்கு தூண்டுதலாக இருந்த மணிகண்டனையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #mom tortured son
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story