13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! 3 மாத கர்ப்பம்.! சிக்கிய மூன்று இளைஞர்கள்.! அதிர்ச்சி பின்னணி.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, அவரது உறவினரான தின
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, அவரது உறவினரான தினேஷ்குமார் என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் திருமணம் பற்றியே பேசாமல் இருந்துவந்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு முருகவேல் என்ற நபர் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமிக்கு அண்ணன் முறை கொண்ட சிங்காரவேலன் என்ற நபரும் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது தனக்கு தினேஷ்குமார், முருகவேல், சிங்காரவேலன் ஆகிய மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362