×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிவேகமாக சென்ற ஆட்டோ..! சாலை தடுப்பில் மோதி 3 பேர் உயிரிழப்பு.! தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர்.!

அதிவேகமாக சென்ற ஆட்டோ..! சாலை தடுப்பில் மோதி 3 பேர் உயிரிழப்பு.! தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர்.!

Advertisement

வேகமாக சென்ற ஆட்டோ சாலை தடுப்பில் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் சிக்னல் பகுதியில் ஆட்டோ ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது நிலை தடுமாறிய ஆட்டோ முன்னாள் சென்ற பேருந்து மீது மோதாமல் இருக்க திருப்பியபோது சாலை தடுப்பில் ஆட்டோ மோதியது. அந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவை வேகமாக ஓட்டியதுடன் 3 பேர் இறப்புக்கு காரணமான ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #auto
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story