8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி.. 52 வயது நபர் கைது..!
8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி.. 52 வயது நபர் கைது..!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், வேப்பலோடை கழுகாசலபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணி (வயது 52). இவரின் வீட்டருகே 8 வயது சிறுமி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
சிறுமியை அழைத்த மணி, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடக்க முயற்சித்துள்ளார். சுதாரித்த சிறுமி மணியை தள்ளிவிட்டு, சத்தமிட்டவாறு வெளியே ஓடிவந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் என்னவென்று கேட்டு விஷயத்தை தெரிந்துகொண்டுள்ளார். பின்னர், இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362