×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: மீண்டும் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை?.. காதலிக்கு அவசர திருமண ஏற்பாடு: பனைமர காட்டில் இளைஞர் மர்ம மரணம்; தூத்துக்குடியில் பரபரப்பு..!

#BigNews: மீண்டும் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை?.. காதலிக்கு அவசர திருமண ஏற்பாடு: பனைமர காட்டில் இளைஞர் மர்ம மரணம்; தூத்துக்குடியில் பரபரப்பு..!

Advertisement

 

காதலிக்கு திருமணம் என்ற செய்தி அறிந்து சொந்த ஊர் வந்தவர் மர்ம மரணம் அடைந்தது எப்படி? என கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், குளத்தூர், சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரியப்பன். இதே பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியுள்ளது. 

இதனால் காதல் ஜோடி தங்களை உயிருக்கு உயிராக விரும்பி வந்துள்ளது. இந்நிலையில், இருவரின் காதல் விவகாரமும் அவரவரின் பெற்றோருக்கு தெரியவரவே, மாரியப்பனுக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க விருப்பமில்லாத பெற்றோர், மகளுக்கு வேறொரு இடத்தில் வரன் பார்த்துள்ளனர். 

திருமணம் உடனடியாக நடக்க தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து, நாளைய தினத்தில் திருமணம் நடைபெறவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, கோயம்புத்தூரில் வேலை பார்த்துவந்த மாரியப்பன், பனைமரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கழுத்து, மார்பு பகுதியில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர், மாறியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

பெண் வீட்டாரால் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? வேறேதும் பிரச்சனையில் காதல் விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்தி இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #Vilathikulam #Murder #police #Investigation #Love #tamilnadu #தூத்துக்குடி கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story