×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: பள்ளி கழிவறையில் பிணமாக தொங்கிய 12 ம் வகுப்பு மாணவி... பெற்றோர்கள் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு.!

#Breaking: பள்ளி கழிவறையில் பிணமாக தொங்கிய 12 ம் வகுப்பு மாணவி... பெற்றோர்கள் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு.!

Advertisement

12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி பள்ளியின் கழிவறையில் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், பசுவந்தனை சில்லாங்குளம் கிராமத்தில் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதியும் உள்ளது.

இந்நிலையில், இங்கு இராமநாதபுரத்தை சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறிந்த பசுவந்தனை காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே, மாணவியின் மரணம் தொடர்பாக தகவல் அறிந்த அவரின் உறவினர்கள், பள்ளியின் விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உறவினர்கள் தரப்பில் கூறுகையில் மாணவியின் மரணம் தொடர்பாக சரிவர பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #Ottapidaram #school girl #suicide #police #Investigation #தூத்துக்குடி #தற்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story