×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொத்து தகராறில் தங்கை - மைத்துனர் துள்ளத்துடிக்க பயங்கர கொலை; அண்ணன் மகனோடு சேர்ந்து அதிர்ச்சி செயல்.!

சொத்து தகராறில் தங்கை - மைத்துனர் துள்ளத்துடிக்க பயங்கர கொலை; அண்ணன் மகனோடு சேர்ந்து அதிர்ச்சி செயல்.!

Advertisement

 

தூத்துக்குடி அண்ணா நகரில் வசித்து வருபவர் ராம்குமார். அவரது மனைவி மாரியம்மாள். ராம்குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் வீட்டை இவர்கள் இருவரும் வாங்கி அதில் வசித்து வந்துள்ளனர். முருகேசன் தனது தங்கை வீட்டை வாங்கியதில் இருந்து இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மாரியம்மாளையும், அவரது கணவர் ராம்குமாரையும் அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி உள்ளனர். மாரியம்மாளின் கணவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். அவரை விரட்டி அடித்து ஓட ஓட வெட்டியுள்ளனர். 

இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முருகேசனின் தங்கை மாரியம்மாவையும் வெட்டியதில், இரத்த வெள்ளத்தில் அவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #death #killed #Murder #Land Dispute
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story