பல ஆண்டு காதல், திருமணமான 3 நாட்களில் உயிரை பறித்த கொடூரம்.. தூத்துக்குடி தம்பதி கொலையில் பகீர் தகவல் அம்பலம்.!
பல ஆண்டு காதல், திருமணமான 3 நாட்களில் உயிரை பறித்த கொடூரம்.. தூத்துக்குடி தம்பதி கொலையில் பகீர் தகவல் அம்பலம்.!
தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகர் பகுதியில் வசித்து வரும் மாரிச்செல்வம் (வயது 22), திருவிக நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகா (வயது 21), கடந்த தேவர் ஜெயந்தி அன்று கோவில்பட்டியில் வைத்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் விருப்பமில்லாத பெண் வீட்டார், நேற்று இரவு தம்பதியை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்தது. இந்த விஷயம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கார்த்திகாவின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், காதலனின் பொருளாதார ரீதியான பின்னடைவு கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், உறவினர் கருப்பசாமி மற்றும் பரத் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியோருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362