×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல ஆண்டு காதல், திருமணமான 3 நாட்களில் உயிரை பறித்த கொடூரம்.. தூத்துக்குடி தம்பதி கொலையில் பகீர் தகவல் அம்பலம்.!

பல ஆண்டு காதல், திருமணமான 3 நாட்களில் உயிரை பறித்த கொடூரம்.. தூத்துக்குடி தம்பதி கொலையில் பகீர் தகவல் அம்பலம்.!

Advertisement

 

தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகர் பகுதியில் வசித்து வரும் மாரிச்செல்வம் (வயது 22), திருவிக நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகா (வயது 21), கடந்த தேவர் ஜெயந்தி அன்று கோவில்பட்டியில் வைத்து காதல் திருமணம் செய்து கொண்டனர். 

இதில் விருப்பமில்லாத பெண் வீட்டார், நேற்று இரவு தம்பதியை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்தது. இந்த விஷயம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்நிலையில், கார்த்திகாவின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், காதலனின் பொருளாதார ரீதியான பின்னடைவு கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், உறவினர் கருப்பசாமி மற்றும் பரத் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியோருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #Love #Murder #tamilnadu #தூத்துக்குடி #காதல் ஜோடி #கொலை
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story