×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"காலம் காலமாக இந்த கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன" - திருமாவளவன் காட்டம்!

காலம் காலமாக இந்த கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன - திருமாவளவன் காட்டம்!

Advertisement

மே மாதம் நடைபெற்ற மணிப்பூர் கொடூர சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த செயலை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டது:-

"இம்மண்ணில் தலித்துகளுக்கும், பழங்குடிகளுக்கும் எதிராகக்  காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிசெயல்களைத் தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்.

அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை அம்மணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது,  கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து அவற்றை வீரதீர செயல்களெனப் போலியாய்க்  கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thirumavalavan #Manipur issuse #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story