×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பரிதாப பலி; வளைவு பகுதியில் கவனம் தேவை பயணிகளே.!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பரிதாப பலி; வளைவு பகுதியில் கவனம் தேவை பயணிகளே.!

Advertisement

 

திருவாரூர் நகரில் வசித்து வருபவர் ஹபீப் நிஷா (வயது 31). இவர் தனது உறவினரோடு வங்கிக்கு செல்ல, குடும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். 

இந்த பேருந்து காட்டூர், விளாகம் கிராமத்திற்கு அருகே வந்தபோது, பேருந்தில் இருந்து இறங்க ஹபீப் நிஷா எழுந்து வாசல் பகுதிக்கு அருகே வந்து நின்றுள்ளார். 

அச்சமயம் வளைவில் பேருந்து திரும்பும்போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருவாரூர் #Latest news #women died #thiruvarur #பெண் மரணம் #பேருந்து விபத்து
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story