மகள் தந்தைக்கு வாட்ஸப்பில் அனுப்பிய தகவல்.. அதிர்ந்துபோன பெற்றோர்.. கல்லூரி காதல் சம்பவங்கள்.!
மகள் தந்தைக்கு வாட்ஸப்பில் அனுப்பிய தகவல்.. அதிர்ந்துபோன பெற்றோர்.. கல்லூரி காதல் சம்பவங்கள்.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், பாவட்டக்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல் ரவூப். இவரின் மகள் நூருள் இர்பன் (வயது 20). இவர் மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் கல்லூரியில், தமிழ் பாடப்பிரிவில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த பிப். 17 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நூருளை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று நூருள் இர்பன் தந்தைக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த தகவலில், "தன்னுடன் கல்லூரியில் பயின்று வரும் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த சேதுராமன் என்ற இளைஞரை நான் காதலித்து வந்தேன். நாங்க இருவரும் திருமணம் செய்துகொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்த தகவலை அப்துல் ராவூப் காவல் நிலையத்தில் தெரிவித்து புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற பேரளம் காவல் துறையினர் நூருள் இர்பனை தேடி வருகிறார்கள்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362