பேஸ்புக் பழக்கத்தால் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய 17 வயது சிறுமி.. லாரி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
பேஸ்புக் பழக்கத்தால் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய 17 வயது சிறுமி.. லாரி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
17 வயது சிறுமியிடம் நட்பாக பழகிய 40 வயது லாரி ஓட்டுநர், சிறுமியை சீரழித்து கைவிட்டதால் மனதுடைந்து தற்கொலைக்கு முயற்சித்த சோகம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதில், முகநூல் செயலியை பதிவிறக்கி சிறுமி உபயோகம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியிடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியை சேர்ந்த 40 வயது லாரி ஓட்டுநர் முகநூல் வழியாக நட்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர், சிறுமியை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார்.
சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய காமுகன், வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், சிறுமியுடன் கொண்ட பழக்கத்தை கைவிட்டு இருக்கிறான். இதனால் மனதுடைந்து போன சிறுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கவே, காவல் துறையினர் விசாரணையில் லாரி ஓட்டுனரின் பகீர் செயல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, லாரி ஓட்டுனரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362