×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்.. திருவாரூரில் அதிர்ச்சி.!

10 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்.. திருவாரூரில் அதிர்ச்சி.!

Advertisement

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

திருவாரூரில் உள்ள தனியார் கேட்டரிங் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வருபவர் ஷேக் தாவூத். இவர் சம்பவத்தன்று, தனது வீட்டருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு அழுது கொண்டே வந்த நிலையில், பெற்றோரிடம் சிறுமியிடம் ஏன் அழுகிறாய்? என விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி தனக்கு நடந்த கொடுமையை கண்ணீருடன் விவரித்து இருக்கிறார். 

விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷேக் தாவூத்தை நேற்று போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvarur #tamilnadu #Child Girl #Minor Girl #sexual abuse #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story