×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வகுப்பறை பூட்டில் மலத்தை தடவி சென்ற விஷமிகள்; திருத்தணியில் சாதிய கொடுமை..!

வகுப்பறை பூட்டில் மலத்தை தடவி சென்ற விஷமிகள்; திருத்தணியில் சாதிய கொடுமை..!

Advertisement

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, மத்தூர் ஊராட்சியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 

பள்ளியில் கட்டமைப்புகள் சரிவர இல்லாத காரணத்தால், சாதிய பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் வகுப்பறை பூட்டுகளில் மர்ம நபர்கள் மலத்தை பூசிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 18ம் தேதியான நேற்று காலை நேரத்தில் பள்ளிக்கு வருகைதந்த மாணவ - மாணவியர்கள், ஆசிரியர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து வகுப்பறைக்குள் செல்லாமல் நின்றனர்.  

இவ்வாறான செயலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டமும் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பெற்றோர்-ஆசியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvallur #Tiruttani #Classroom
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story