×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லூரி மாணவரின் சடலம் தண்டவாளத்தில் மீட்பு.. காதல் பிரச்சனையில் கொலையா? தற்கொலையா?.! 

கல்லூரி மாணவரின் சடலம் தண்டவாளத்தில் மீட்பு.. காதல் பிரச்சனையில் கொலையா? தற்கொலையா?.! 

Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, சிங்கராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தோனீஸ்வரன். இவர் தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்து வந்துள்ளார். அங்குள்ள ஆர்.எஸ் மங்காபுரம் கிராமத்தில் இளம்பெண் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். 

இருவரும் காதலித்து வந்ததாக தெரியவரும் நிலையில், திருத்தணி பொன்பாடி இரயில் நிலைய தண்டவாளத்தில் தோனீஸ்வரன் உடல் சடலமாக இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருத்தணி காவல் துறையினர், தோனீஸ்வரனின் உடலை மீட்டு அரக்கோணம் இரயில்வே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததால் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அவர் காதல் பிரச்சனையில் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvallur #Thiruttani #college student #Mystery Death #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story