தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தையில்லாத ஏக்கத்தில், திருமணமான இரண்டரை ஆண்டுகளில் 22 வயது இளம்பெண் தற்கொலை; உறவினர்கள் கண்ணீர்.!

குழந்தையில்லாத ஏக்கத்தில், திருமணமான இரண்டரை ஆண்டுகளில் 22 வயது இளம்பெண் தற்கொலை; உறவினர்கள் கண்ணீர்.!

Thiruvallur Gummidipoondi Women Suicide  Advertisement

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்புக்குளம் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகள் சௌந்தர்யா (வயது 22). மங்கவாரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேஷ் (வயது 25). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. 

திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆகும் நிலையில், குழந்தை இல்லை என இருவரும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. சௌந்தர்யா மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு, உறவினர்களிடம் தனது நிலையை கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். அவர்கள் ஆறுதல் கூறி மனதை தேற்ற முயற்சித்துள்ளனர். 

thiruvallur

இந்நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டில் தனியே இருந்த சௌந்தர்யா, எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சௌந்தர்யா, நேற்று பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvallur #Gummidipoondi #Women #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story