சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!
Thiruvallur Goswalya Death: கள்ளக்காதல் விவாகரத்துக்கு மனைவி இடையூறாக இருப்பதால் நடந்த கொலை சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி.எட் மாணவி கௌசல்யா மரணம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
B.Ed படித்து வந்த மனைவியை கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
புதுமண தம்பதிகள்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பெரியபாளையம், அத்திவாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (வயது 20). அங்குள்ள பெரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). இவர் கௌசல்யாவின் அத்தை மகன் ஆவார். பி.எட் படித்து வந்த பட்டதாரி பெண்ணான ரேவதியை, கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக ராஜேஷ் திருமணம் செய்துள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ராஜேஷ் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!
உடலில் காயம் & மர்ம மரணம்:
திருமணத்துக்கு பின்னர் மாணவி கௌசல்யா தனது படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். இதனிடையே, வீட்டில் இருந்த கௌசல்யா சம்பவத்தன்று சமயலறையில் கொட்டிய எண்ணெய் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்ததாக ராஜேஷ் தனது மாமனார் முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மகளுக்கு நேர்ந்தது தெரியாமல் பதறியபடி வந்த பெற்றோர், உடலில் காயம் இருப்பதை கவனித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கௌசல்யாவை கொண்டு சென்றபோது, மரணம் உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறை விசாரணையில் திடுக்:
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தடயவியல் ஆய்வும் நடைபெற்று வந்தது. ராஜேஷிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, செங்குன்றம் பகுதியில் வசித்து வரும் ராஜேஷின் சித்தி மகள் தீபிகா @ லோகேஸ்வரியுடன், ராஜேஷுக்கு கள்ளக்காதல் உறவு இருந்துள்ளது. தங்கை உறவுமுறை கொண்ட இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கள்ளக்காதல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்து கண்டித்து இருக்கின்றனர்.
கள்ளக்காதல் ஜோடி கைது:
மேலும், ராஜேஷுக்கு அவரது அத்தை மகளான மாணவி கவுசல்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் கவுசல்யாவுக்கு இந்த விவகாரம் தெரியவரவே, அவ்வப்போது தம்பதிகள் இடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில், ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடி, தலையணை அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமானது. உண்மையை அறிந்த காவல்துறையினர் ராஜேஷ், தீபிகா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.