திருமாவளவன் திரும்ப பெற திடீர் அறிக்கை.! .பின்னணியில் இருக்கும் பல ஆண்டுகால ரகசியம்...!!!
அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாகப் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய கீதம் தொடர்பான வரலாற்றை சுட்டிக்காட்டிய திருமாவளவன்
தனது அறிக்கையில், இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் தேசிய கீதம் தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றதாகவும், அதன் பின்னரே 'ஜன கண மன' தேசிய கீதமாக ஏற்கப்பட்டதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தங்களாக அதுவே நாட்டின் தேசிய கீதமாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: விசிக கட்சி 100% தேர்தல் களத்தில் போட்டியிடாது...! காலையிலேயே திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு.!!!
மதச்சார்பின்மை குறித்து எழுப்பிய கேள்வி
'வந்தே மாதரம்' பாடலின் வரலாற்றுப் பின்னணி குறித்தும் தனது அறிக்கையில் அவர் விளக்கியுள்ளார். குறிப்பாக, பாடலின் சில பகுதிகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக விடுதலைப் போராட்ட காலத்திலேயே முதல் இரண்டு பத்திகளை மட்டும் பயன்படுத்தும் சமரசம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றறிக்கையை திரும்பப் பெற கோரிக்கை
அரசு நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட பாடலைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். எனவே, இந்தச் சுற்றறிக்கையை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு இதனை ஏற்கக் கூடாது என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன்... மகன் மிதுனின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பை திட்டவட்டமாக அறிவித்த எடப்பாடி...! அதிரும் அரசியல் களம்..!!!