×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகிழ்ச்சியான செய்தி..! தமிழகத்தில் மூன்றாவது நபர் கொரோனாவிடம் இருந்து விடுதலை!

Third person in tamilnadu cured from corono

Advertisement

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது நபர் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த முதல் நபர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்.

டெல்லியிலிருந்து ரயிலில் வந்த இரண்டாவது நபரும் ஏற்கனவே குணமாகிவிட்டார். தற்போது இவர்கள் இருவரை தொடர்ந்து மூன்றாவது நபரும் குணமாகிவிட்டார். 21 வயது நிரம்பிய அந்த நபர் அயர்லாந்திலிருந்து வந்தவர்.

இதுவரை தமிழகத்தில் குணமாகிய மூவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். மருத்துவர்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tn corono #Coronovirus #Minister vijayabaskar #RGGH
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story