×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருப்பூரில் பரபரப்பு.. திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது நடந்த விபரீதம்.. சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்..!

திருப்பூரில் பரபரப்பு.. திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது நடந்த விபரீதம்.. சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்..!

Advertisement

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஆம்னி வேன் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சோழமாதேவியை சேர்ந்த ரசிதா பேகம், பானு, சஸ்மிகா மற்றும் இஸ்மாயில் ஆகிய 4 பேரும் உடுமலையில் உள்ள தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வாடகை ஆம்னி வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்கபுரம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை ஆம்னி வேன் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த சரக்கு வாகனத்தில் அதிவேகமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் சிறுமி உட்பட 3 பெண்களும், ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சிறுவன் இஸ்மாயில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Road accident #dead #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story