மழையில்லாமல் 2 வருடம் கழித்து முற்றிலும் வறண்ட மூல வைகை..! சோகத்தில் கிராம மக்கள்.!
மழையில்லாமல் 2 வருடம் கழித்து முற்றிலும் வறண்ட மூல வைகை..! சோகத்தில் கிராம மக்கள்.!
தேனி மாவட்டத்தில் வருஷநாடு உள்ள கடமலை - மயிலை ஒன்றியத்தில் இருக்கும் வெள்ளிமலை வனப்பகுதியில், மூல வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. மூல வைகையில் உறைகிணறுகள் அமைத்து கடமலை - மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் 2 வருடமாக மூல வகையில் நீர்வரத்து இருந்து வந்தது. இதனால் அதன் வழியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வு பெற்றது. இதனால் விவசாயமும் நன்றாக நடந்தது. கடந்த 3 மாதமாக மழை குறைந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதனால் மூலவைகையில் நீர் வரத்து குறைந்து, முற்றிலும் வறண்டுள்ளது. உறைகிணறுகளின் நீர்மட்டமும் குறைவதால், கடமலை - மயிலை ஒன்றிய கூட்டுகுடிநீர் திட்டத்தை விரைந்து அதிகாரிகள் முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362