தீவிர பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்.! திடீரென அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்.!
அதிமுக கூட்டணி கட்சியின் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை அரிவாளால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சி பிரமுகர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நேற்று அவர் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வியாசர்பாடி உதய சூரியன் நகரில் நேற்று காலையில் பிரச்சாரம் செய்தார். அவருடன், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பலர் இருந்தனர்.
அப்போது, தொண்டர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு என்.ஆர்.தனபாலனை வெட்ட முயன்றார். அப்போது என்.ஆர்.தனபாலன் சுதாரித்துக் கொண்டு சற்று விலகினார். ஆனால் அந்த அரிவாள் அருகில் இருந்த அதிமுக நிர்வாகி சிவக்குமார் எபவர் கையில் வெட்டியது. இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிவக்குமாரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அனைவரும் ஒன்று சேர்ந்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தனபாலனை கொலை செய்ய முயன்ற நபரை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362