×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலியின் பெற்றோரை வீடு புகுந்து வெட்டிய இளைஞர்: கட்டி வைத்து வெளுத்த ஊர் மக்கள்..!

கள்ளக்காதலியின் பெற்றோரை வீடு புகுந்து வெட்டிய இளைஞர்: கட்டி வைத்து வெளுத்த ஊர் மக்கள்..!

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள வெள்ளையகவுண்டனூர் பச்சலாகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (57). இவரது மனைவி ராணி(54). இந்த தம்பதியினரின் மகள் உமா. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உமாவின் கணவர் இறந்துவிட்டதால்  தனது பெற்றோருடன் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தனியார் மில் வேலைக்கு சென்று மகன்களை படிக்க வைத்துவந்தார். அங்கே வேலை செய்த தங்கச்சியம்மாபட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து (30) என்பவருடன் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

மகளின் கள்ளத் தொடர்பு குறித்த விபரம்  உமாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் மகளை கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து உமா காளிமுத்துவுடன் உள்ள தொடர்பை துண்டித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த காளிமுத்து உமாவின் வீட்டுக்கு சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறியபடி தம்பதியினர் இருவரும் வீட்டை வீட்டு வெளியே ஓடினர்.

அலறல் சத்தம் கேட்ட  அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தம்பதியினரை காப்பாற்றினர். காளிமுத்துவை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த இருவரையும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காளிமுத்துவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Stabbed #police arrest #Illegal Love Affair #Dindigul #vedasanthur
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story