பெரியப்பா மகளை காதலித்த இளைஞர்...கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் சோகம்...!
பெரியப்பா மகளை காதலித்த இளைஞர்...கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் சோகம்...!
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள போலுகாக கொல்லை மலை கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் மகன் கிரீஷ் என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இவர் பொங்கல் விடுமுறைக்காக கடந்த 13-ஆம் பெட்டமுகிலாளம் கிராமத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
கிரீஷ் அந்த கிராமத்தில் உள்ள தனது தந்தையின் அண்ணன் உறவு முறையான பாப்பாவின் மகள் நாகம்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நாகம்மா கிரீஷ்க்கு தங்கை உறவுமுறை வருவதால் அவரது பெற்றோர் முறையில்லாத அவரது காதலை கண்டித்துள்ளனர்.
விடுமுறைக்கு கிரீஷ் வந்துள்ளதை அறிந்த நாகம்மா நேற்று கிரிஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். நாகம்மா வீட்டில் இல்லாததால் நாகம்மாவை தேடி, அவரது தந்தை பசப்பா, அண்ணன் சிவகுமார் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கிரீஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த பசப்பா மற்றும் அவரது உறவினர்கள் கிரீஷை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின் பசப்பா தனது மகள் நாகம்மாவை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
உறவினர்கள் தாக்கியதால் கோபத்தில் அங்கிருந்து சென்ற கிரீஷ் அருகில் இருந்த வீரபத்திரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362