×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அலுவலகத்திற்கு வந்த கணவனால் சர்ச்சை!.. உடலில் தீ வைத்துக் கொண்ட மனைவி: பதறிய அலுவலக ஊழியர்கள்..!

அலுவலகத்திற்கு வந்த கணவனால் சர்ச்சை!.. உடலில் தீ வைத்துக் கொண்ட மனைவி: பதறிய அலுவலக ஊழியர்கள்..!

Advertisement

கடலூர் மாவட்டம், கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் அருகேயுள்ள வைடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (35). இவர் கடலூரில் உள்ள சாவடி பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அலமேலு (29). இவர் செம்மண்டலம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு மேற்கூரை தயாரிக்கும் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அலமேலு வேலைக்கு வந்துள்ளர். பின்னர், மாலையில் வேலை முடிந்ததும் அவரது கணவர் ஜெயச்சந்திரன் அலமேலுவை அழைத்துச் செல்வதற்காக அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அலமேலு  திடீரென அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதன் காரணமாக அவரது உடல் முழுவதும் தீ பரவியது. அவரை காப்பாற்ற முயன்ற ஜெயச்சந்திரன் கைகளிலும் தீ பற்றி காயம் ஏற்பட்டது. உடன் அங்கிருந்த ஊழியர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், கடலூர் புதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore District #Nellikuppam #Chavadi #fire accident #police investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story