×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே!! சரக்கு அடிக்க பணம் தர மறுத்த மனைவி .... பின்பு கணவன் செய்த கொடூர செயல்..!

அடக்கொடுமையே!! சரக்கு அடிக்க பணம் தர மறுத்த மனைவி .... பின்பு கணவன் செய்த கொடூர செயல்..!

Advertisement

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் பவித்ரா. பவித்ராவிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில்தான் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்தான ராஜா என்பவருடன் பவித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவே பவித்ராவை சரமாரியாக தாக்கிவிட்டு அவரது தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு கணவர் ராஜா தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த  ராஜாவை தேடி வந்த நிலையில் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சம்பவத்தன்று மது அருந்துவதற்காக பவித்ராவிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும் பவித்ரா பணம் தர மறுத்ததால் அவரது கழுத்தில் இருந்த தாலி கையிற்றால் பவித்ராவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் ராஜா. பின்னர் ராஜாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Investigation #arrested
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story