கள்ளக்குறிச்சியை தொடர்ந்து; நெருக்கடிக்கு உள்ளான செங்கல்பட்டு மாணவி செய்த காரியத்தால் பதறிய ஆசிரியர்கள்..!
கள்ளக்குறிச்சியை தொடர்ந்து; நெருக்கடிக்கு உள்ளான செங்கல்பட்டு மாணவி செய்த காரியத்தால் பதறிய ஆசிரியர்கள்..!
மாமல்லபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளியின் இரண்டாவது வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயற்சி.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் கஜசுபமித்ரா(14) மாமல்லபுரம் பூஞ்சேரியில் இருக்கும் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு அந்த பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது.
அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்து, தேர்வு எழுத முயன்றதால், இதனை ஆசிரியை அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மேலும், நாளை பள்ளிக்கு வரும் போது அவரது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என மாணவியிடம் கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த மாணவி கஜசுபமித்ரா திடீரென இரண்டாவது மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது மாணவி கஜசுபமித்ரா மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362