×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து; நெருக்கடிக்கு உள்ளான செங்கல்பட்டு மாணவி செய்த காரியத்தால் பதறிய ஆசிரியர்கள்..!

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து; நெருக்கடிக்கு உள்ளான செங்கல்பட்டு மாணவி செய்த காரியத்தால் பதறிய ஆசிரியர்கள்..!

Advertisement

மாமல்லபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளியின் இரண்டாவது வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயற்சி.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் கஜசுபமித்ரா(14) மாமல்லபுரம் பூஞ்சேரியில் இருக்கும் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு அந்த பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது.

அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்து, தேர்வு எழுத முயன்றதால், இதனை ஆசிரியை அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மேலும், நாளை பள்ளிக்கு வரும் போது அவரது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என மாணவியிடம் கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த மாணவி கஜசுபமித்ரா திடீரென இரண்டாவது மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது மாணவி கஜசுபமித்ரா மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 
மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Mamallapuram #student jumps from 2nd floor #govt high school #teacher
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story