தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டு, மூன்று நாட்களாக வீட்டிற்குள்ளேயே பதுங்கி இருந்த நபர்...கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

நீ எல்லாம் ஒரு மகனா..? மகனால் தாய்க்கு நேர்ந்த விபரீதம்..!

the-son-who-killed-his-mother Advertisement

விழுப்புரம்  மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் அசோதை. இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். சக்திவேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது . சக்தி மது பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சக்திவேல் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். சக்திவேல் எப்போதும் குடித்துவிட்டு தனது தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிக்க பணம் தரக்கோரி தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அசோதை பணம் தர மறுக்கவே இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் கடுமையாக தாக்கியுள்ளான்.

Murder

மகனால் தாக்கப்பட்ட அசோதை சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனால் பதறிப்போன சக்திவேல் தனது தாய் இறந்ததை மறைப்பதற்காக இரவோடு இரவாக வீட்டின் கழிவறைக்கு பின்னால் தாயின் உடலை புதைத்து வைத்துள்ளார். பின்பு வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி உள்ளார். 

இதனை கண்ட அக்கம் பக்கத்தினருக்கு சக்திவேலின் மீது சந்தேகம் வரவே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்தனர். மேலும் சக்தி வேலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Mother died #Investigation #Villupuram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story