×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காபி போட சென்ற பெண் கரிக்கட்டையாகி கீழே விழுந்த பரபரப்பு சம்பவம்... நடந்தது என்ன..?

காபி போட சென்ற பெண் கரிக்கட்டையாகி கீழே விழுந்த பரபரப்பு சம்பவம்... நடந்தது என்ன..?

Advertisement

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் சீதாம்மாள் தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த 10 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜெயந்தி காபி போடுவதற்காக மூன்றாவது மாடியில் இருக்கும் சமையலறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பிடிக்கவே அதனை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் அங்கும் இங்கும் ஓடிய ஜெயந்தி மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

 

இதனையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயந்தி இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fire accident #dead #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story