தொடரும் குழந்தை கடத்தல்..!! அரசு ஆஸ்பத்திரியில் கைவரிசை காட்டிய கில்லாடி லேடி கைது..!!
தொடரும் குழந்தை கடத்தல்..!! அரசு மருத்துவமனையில் கைவரிசை காட்டிய கில்லாடி லேடி கைது..!!
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையைக் கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 7 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தையை 12 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்பவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் தனக்கு திருமணமாகி பல வருடங்களாகியும், குழந்தை இல்லாத காரணத்தால் குழந்தையை கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பாண்டியம்மாள் 9 மாதம் கர்ப்பமாக இருப்பதாக நடித்து பிரசவத்திற்கு சென்றது போல மருத்துவமனைக்கு சென்று குழந்தையை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர், கடத்தப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.