×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலித்து திருமணம் செய்த காதலர்கள்!.. 2 மாத உல்லாச வாழ்க்கைக்கு பின்னர் அதிர்ச்சியளித்த இளம்பெண்..!

காதலித்து திருமணம் செய்த காதலர்கள்!.. 2 மாத உல்லாச வாழ்க்கைக்கு பின்னர் அதிர்ச்சியளித்த இளம்பெண்..!

Advertisement

சென்னை, தாம்பரம் அருகேயுள்ள ரங்கனாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (25). இவர் ஊரப்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் நெருங்கி பழகிவந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடராஜன் கூறியுள்ளார். மேலும் அபிநயாவின் பெற்றோரை தனது வீட்டிற்க்கு அழைத்து வந்து திருமணம் குறித்து பேசுமாறும் கூறியுள்ளார்.  தனக்கு யாரும் இல்லை என்று அபிநயா பலிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, நேற்று நடராஜனின் அருகில் தூங்கி கொண்டிருந்த அபிநயா திடிரென காணமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைக்கபட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்துடன் அபிநயா மாயமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அபிநயாவின் ஆதார் கார்டை கைபற்றி அதில் இருக்கும் விலாசத்திற்க்கு விரைந்துள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Love Affair #new marriage #chennai #Tambaram #Bride escape #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story